
சென்ற வாரம் சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த அந்த வன்முறை சம்பவம் பார்த்தவர் நெஞ்சங்களை கலங்கடித்து இருக்கும்.என்னை பொறுத்த வரை அது...உணர்ச்சி போராட்டம். காலம் காலமாய் அடிமைப் படுத்தப்பட்டு இருந்த ஒரு இனம்...அடிவாங்கி கொன்டு இருந்த ஒரு இனம்...உணர்ச்சிக் கொன்டு ஒரு படி முன்னேறி இருக்கிறது. அந்த அடிதடிக் கான காரணம்..ஒரு சாதிய வன்கொடுமைத் தான். தேவர் ஜெயந்தி கொண்டாட அச்சடிக்கப் பட்ட..நோட்டீசில்..அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்பதற்க்கு பதிலாக, வெறும் சட்டக் கல்லூரி என்றே இருந்து இருக்கிறது.அம்பேத்கர் இன மாணவர்கள் இது பற்றி அவர்களிடம் கேட்டதிற்கு...அந்த ஈன சாதி பெயரெல்லாம் போடுவதில்லை என்று..சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார்கள்.எது எப்படியோ...அம்பேத்கர் மக்களிடம் இருக்க வேண்டும் என்ற் சொன்ன சூடும், சொரணையும்....இப்போது அவர்களிடத்தில் நான் பார்க்கிறேன். இது ஒரு சாதி மோதல் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் நமக்கு கிடையாது.இந்த தலித்துக்களுக்கு சூடும், சொரணையும் வந்து விடக்கூடாது என்ற ஆதிக்க சாதி மனப்பான்மையை இந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் உடைத்து காண்பித்தார்கள்.எவன் தொட்டால் தீட்டு என்றார்களோ...அவன் தான், இந்த நாட்டின் சட்டத்தை தீட்டோ தீட்டு என்று தீட்டினான்.ஆனால் இந்த ஆதிக்க சாதி இந்துக்கள் இன்னும் இவர்களை தாழ்த்தியே பிழைக்க வேன்டும் என்ற சாதிய வெறியோடு அலைகிறார்கள் என்பது தான் கொடுமை.முதலில் "அவனை கொல்லுங்கடா என்று வெறியோடு கத்தியை தீட்டிக் கொன்டு வந்தவன் அதிக்க சாதி வெறியன்.அவனிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே எந்த மாணவர்கள் வன்முறையை கையில் எடுக்க வேண்டி யாகிவிட்டது. இனிமேலாவது, ஆதிக்க சாதி வெறியர்கள் தங்கள் வன்கொடுமை வெறியை குறைத்து கொள்வது நலம்.
ya nice
ReplyDeletegood keep on wright
ReplyDeleteya nice
ReplyDelete